தமிழக அரசை குறை சொல்ல எதுவுமில்லை.. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு

மழைக்காலத்தில்,  தமிழக அரசும், முதல்வர் மற்றும் அமைச்சர்களும் தீவிரமாக மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில்  குறை சொல்வதற்கு ஏதுமில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை குறை சொல்ல எதுவுமில்லை.. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு

மழைக்காலத்தில்,  தமிழக அரசும், முதல்வர் மற்றும் அமைச்சர்களும் தீவிரமாக மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில்  குறை சொல்வதற்கு ஏதுமில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் ‘பிரதமர் மோடி கிச்சனை’ திறந்து வைத்த அண்ணாமலை இதனை தெரிவித்தார்.  

மக்களுக்கு சேவை செய்வதில் பாஜக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கென டோல்ஃப்ரீ எண் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், மோட்டாரை கொண்டு மழைவெள்ளத்தை அகற்றி, உணவு பொட்டலங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்தும், தமிழக அரசு ஏன் அதனை குறைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.