பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்களால் பரபரப்பு...!

பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்களால் பரபரப்பு...!

திருச்சி தபால் நிலையம் அருகே பேருந்தின் மேற்கூரையில் ஏறி நின்று ஆட்டம் போட்ட இளைஞர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தியையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்த இளைஞர்கள், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை ரவுண்டானா முன்பு, தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை வேகமாக உருமவிட்டவாறு அங்குமிங்கும் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

இதையும் படிக்க: திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாதம் தலையெடுக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்!

அப்போது அதில் ஓரிரு இளைஞர்கள் அவ்வழியே வந்த  தனியார் பேருந்தின் மேற்கூரையில் ஏறி  நின்று ஆடிப்பாடி கூச்சலிட்ட செயல் அவ்வழியே சென்ற பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது. இளைஞர்களின் இந்த செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.