அதிமுக என்னும் ஆலமரத்தை சாதிமரமாக மாற்றிவிட்டார்கள்.! குமுறும் தொண்டர்.! 

அதிமுக என்னும் ஆலமரத்தை சாதிமரமாக மாற்றிவிட்டார்கள்.! குமுறும் தொண்டர்.! 

அதிமுக என்ற மிக பெரிய ஆலமரத்தை தற்போது ஒரு ஜாதி மரமாக மாற்றி வைத்துள்ளார்கள் என சசிகலாவிடம் தொண்டர் ஒருவர் பேசும் ஆடியோ வெளிவந்துள்ளது. 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி எதிர்க்கட்சியானதும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சியலைகளை கொடுத்து வருகிறார். 

அவரோடு பேசியவர்களை கட்சியிலிருந்து அதிமுக நீக்கினாலும் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த கிரிதரன் என்பவரிடம்  சசிகலா பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது. அந்த ஆடியோவில் பேசும் கிரிதரன் ,"அதிமுகவின் பொது செயலாளர் நீங்கள் தான். முதுகில் குத்துவத்திற்கு இடமே இல்லை என்று நீங்கள் கூறியதை இன்று வரை என்னால் தாங்க முடியவில்லை. அம்மா மறைவிற்கு பிறகு சின்னம்மா தான் என்ற நிலை பாட்டை நான் எடுத்தேன் அதனால் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

புரட்சி தலைவரின் வாரிசு அம்மா அம்மா அவர்களின் வாரிசு சின்னம்மா தான்.ஒன்றரை கோடி தொண்டர்களும் உங்கள் வாரிசு தான். எடப்பாடி பழனிச்சாமியிடம் கட்சியை பார்த்து கொள்ளுமாறு ஒப்படைத்த அம்மாவை யார் என்றே தெரியாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பெண்கள் அதிகமாக நேசிக்க கூடியவர் சின்னம்மா..

அதிமுக என்ற மிக பெரிய ஆலமரத்தை தற்போது ஒரு ஜாதி மரமாக மாற்றி வைத்துள்ளார்கள். தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள் எனவே நிச்சயம் அம்மா அவர்கள் சொன்னது போல் கட்சிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுப்போம்" எனக் கூறியுள்ளார்.