ஆளுநரை அவதூறாக பேசுவதை திருமா நிறுத்த வேண்டும்...ஹெச்.ராஜா ஆவேசம்!

ஆளுநரை அவதூறாக பேசுவதை திருமா நிறுத்த வேண்டும்...ஹெச்.ராஜா ஆவேசம்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையில் கூட்டணி அமையும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, கோவை சம்பவத்தில் தனது வாக்கு வங்கிக்காக தான் NIA விசாரணைக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டாரா? NIAக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை. தன்னோட ஓட்டு வாங்கிக்காக நாளைக்கு அவர்களுடைய ஆட்களை கைது செய்தால் அதை மத்திய அரசுதான் செய்தது என சொல்லிக் கொள்வதற்காக அறிவித்தாரோ என்னவோ? என்று திமுகவை சாடினார்.

இதையும் படிக்க: 44 இடங்களில் ஆர்.எஸ். எஸ் பேரணி நடத்த அனுமதி...எந்தெந்த இடம் தெரியுமா?

 இதனையடுத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையில் கூட்டணி அமையும் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு என கூறினார். மேலும், தமிழக ஆளுநரை அவதூறாக பேசுவதை விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து பேசினார்.