"திருவண்ணாமலை" இரண்டு மணி நேரம் பெய்த கனமழை.. தொடர் மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"திருவண்ணாமலை" இரண்டு மணி நேரம் பெய்த கனமழை.. தொடர் மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் நடமாட்டம் சாலைகள் குறைந்தளவே காணப்படுகிறது.

இதேபோல் செங்கம் பகுதியில் மிதமான மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்தகாற்று வீசியதில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழையால் சாலை மற்றும் வீதிகளில் வெள்ளநீர் ஓடியது.