பவளப்பாறைகளைப் பதுக்கி வைத்த நபர் கைது!!!

தடை செய்யப்பட்ட பவளப் பாறைகள் பதுக்கி வைத்த நபரை பிடித்து போலீசார் மற்றும் வனத்துறை தீவிர விசாரணை நடத்தியது.

பவளப்பாறைகளைப் பதுக்கி வைத்த நபர் கைது!!!

கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த சாம்சன் இவர் கோவை சிறுவாணி சாலையில் பழைய நாணயங்கள் மற்றும் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அறிய வகை தடை செய்யப்பட்ட பவளைப் பாறைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

போலீசார் ஒரு குழுவாக சென்று சாம்சங் கடையில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட  பவளப் பாறைகள் மற்றும் பவளப் பாறைகள் கொண்ட செய்யப்பட்ட இரண்டு மாலைகள் ஆகியவை அங்கு இருந்தது. இதை எடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | போதை மாத்திரை, டானிக் விற்பனை : போலி மருந்து விற்பனையாளர்கள் கைது !!

பின்னர் போலீசார் சாம்சங் மதுக்கரை வன அலுவலர் சந்தியாவிடம் ஒப்படைத்தனர். அவர் பவள பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து சாம்சங் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். உலகிலே அந்தமான் மட்டும் கிடைக்கும் கூடிய இந்தப் பவளப் பாறைகள் விலை ஒரு கிராம் ரூபாய் 2500 ஆகும். இந்தப் பவளப் பாறைகள் சாம்சங் எவ்வாறு கிடைத்தது. அவர் யாரிடம் வாங்கினார்.

இதற்கு முன் இது போன்ற பவளப் பாறைகளை அவர் விற்பனை செய்து உள்ளாரா எத்தனை ரூபாய்க்கு வாங்கி அவர் விற்றார் மேலும் இது சம்பந்தமாக அவருக்கு வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | வழக்கறிஞர் கொலையில் புதிய திருப்பம்!!! சிசிடிவி காட்சி வெளியீடு!!!