மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் தி.மு.க.வினரை அனுசரித்து செல்ல வேண்டும் - அமைச்சர் அறிவுரை...

இராஜபாளையத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்கள் திமுகவினரை அனுசரித்து செல்ல வேண்டும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அறிவுரை கூறியுள்ளார்.

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் தி.மு.க.வினரை அனுசரித்து செல்ல வேண்டும் - அமைச்சர் அறிவுரை...

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் பாஸ்கர் முன்னாள் நகர செயலாளர் முத்துகிருஷ்ண ராஜா .மாரியப்பன் உள்ளிட்டோர் தலைமையில் திமுகவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்தனர். இதில் அ.ம.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்து கொண்ட விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசும்பொழுது நான் எம்.ஜி. ஆர். இருந்த காலத்தில் நான் அ.தி.மு.க.வில் இருந்தேன். எம்.ஜி. ஆர். இறந்த பின்பு ஜெயலலிதா உடன் கருத்து வேறுபாட்டில் பிரிந்து, தி.மு.க.வில் இணைந்த பொழுது கலைஞர் கருணாநிதி, எம்.ஜி. ஆர். தான் இறந்துவிட்டார், நான் இருக்கிறேன், வாருங்கள் என்று எங்களை அரவணைத்துக் கொண்டார். அதேபோல் தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தாய் கழகத்திற்கு வந்தவர்களை மனதார தளபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் நீங்கள் உண்மையாக உழைத்தால் உங்களுக்கு அதன் பலன் கிடைக்கும் என கூறினார். மேலும் தி.மு.க.வில்  உள்ள தி.மு.க.வினரை நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும் என அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்த நகரச் செயலாளர் உட்பட பலருக்கும் அறிவுரைகளை வழங்கினார்.