உரிமைத் தொகை; விடுபட்டவர்கள் விரைவில் சேர்க்கப்படுவர் - அமைச்சர் கே.என்.நேரு!

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்த மூன்று மாத அவகாசத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டது. முன்னதாக, நேற்றைய தினமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பணம் 1000 ரூபாய் சில பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.  

இதையும் படிக்க : திராவிடத் தலைமகன் அண்ணா!

இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்த மூன்று மாத அவகாசத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

மேலும், இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.