தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரைமுருகன் உறுதி

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில்  ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில்  ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலுரையில் பேசிய துரைமுருகன், தாம் கோபாலபுரத்து விசுவாசி என்றும் இத்துறையை கேட்டுப் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் தடுப்பணைகள் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளதை ஏற்று அடுத்த 
5 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று துரை முருகன் உறுதி அளித்திருக்கிறார். மேலும்  அதிமுக ஆட்சியில் கதவணை கட்ட வாங்கிய கடனுக்கு,  திமுக ஆட்சியில் வட்டி கட்டும் நிலை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்  அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படும் என்று  துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளுக்கும், செங்கல் சூளைக்கும் மணல் எடுக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் அளிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.