திண்டிவனம் : தொடரும் ஆன்லைன் லாட்டரி விற்பனை...! இரண்டு பேரை கைது செய்த போலீசார்...!

திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது..!

திண்டிவனம் : தொடரும் ஆன்லைன் லாட்டரி விற்பனை...! இரண்டு பேரை கைது செய்த போலீசார்...!

திண்டிவனத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரிலும், திண்டிவனம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையிலும், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று, திண்டிவனத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த, திண்டிவனம் பூதேரி பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவரது மகன் ரஹ்மத்துல்லா மற்றும் சென்னை அண்ணா நகர் பகுதியைச்  சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் பிரவின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய  கார் மற்றும் இரண்டு லேப்டாப்கள், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும், இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.