சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...

சேலம் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி ஒசூரில் எம்.செண்டை இறக்கி விட்டு மீண்டும் பேரிகையை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது புக்கசாகரம் என்னுமிடத்திற்கு அருகில்  வந்த லாரியின் முன்பக்க எஞ்சினில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த ஓட்டுநர் ராஜேந்திரன் உடனடியாக டிப்பர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார். அதற்குள் திடீரென லாரியில் தீ பிடிக்க ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது அங்கிருந்தவர்களின் உதவுயுடன் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லாமல் லாரி முழுவதும் எரிந்து சேதமாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.