பெண்ணின் தலை மீது மாறி மாறி ஏறிய டயர்கள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

புதுச்சேரியில் பெண் அரசு ஊழியர் மீது தனியார் பேருந்து ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெண்ணின் தலை மீது மாறி மாறி ஏறிய டயர்கள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

புதுச்சேரி முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்த ராஜவள்ளி என்பவர் அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தனியார் பேருந்தை அவர் முந்தி செல்ல முயன்ற போது பேருந்து உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தில் பேருந்தின் முன்பக்க டயர் அவர் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.