அப்பாடா.. வெயிலை சமாளிக்க.. 2 ஆண்டுக்கு பிறகு .. மெரினாவில் உள்ள நீச்சல் குளம் இன்று திறப்பு!!

சென்னை மெரினாவில் உள்ள  நீச்சல் குளம் 2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அப்பாடா.. வெயிலை சமாளிக்க.. 2 ஆண்டுக்கு பிறகு .. மெரினாவில் உள்ள நீச்சல் குளம் இன்று திறப்பு!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சென்னை மெரினா நீச்சல் குளம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெரினா நீச்சல் குளம் 100 மீட்டர் நீளம் கொண்டது. இங்கு குளிக்க ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை 5.30 மணியில் இருந்து இரவு 7. 30 மணி வரை நீச்சல் குளம் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் மெரினா நீச்சல் குளத்துக்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதையொட்டி, நீச்சல் குளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.