16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... கனமழை எதிரொலியால் உத்தரவு...

வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... கனமழை எதிரொலியால் உத்தரவு...

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையொட்டி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாகை, திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மழை காரணமாக இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.