ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், இன்று ஏராளமானோர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்...

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், இன்று ஏராளமானோர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

வேட்பு மனுக்களை திரும்ப பெற 23-ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 25-ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலையே வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.