சாலையில் கவிழ்ந்து விழுந்த வேன்... சிதறி விழுந்த வாழைத்தார்களால் போக்குவரத்து பாதிப்பு...

தேன்கனிகோட்டை அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

சாலையில் கவிழ்ந்து விழுந்த வேன்... சிதறி விழுந்த வாழைத்தார்களால் போக்குவரத்து பாதிப்பு...

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா என்ற இடத்தில் வாழைத்தார்களை ஏற்றி சென்ற பிக்கப் வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் பிக்கப் வேன் ஒட்டுநர் யாரப் என்பவர் கை முறிந்து பலத்தகாயமடைந்தார். அவருடன் சென்ற வெங்கடேஷ் என்பவரும் இலேசான காயமடைந்தார். இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் பிக்கப் வேனில் ஏற்றி சென்ற வாழைத்தார்கள் சாலையில் விழுந்தன. இதனையடுத்து பொதுமக்கள் அந்த வாழைத்தார்களை வாகனத்திலிருந்து எடுத்து சாலை ஒரத்தில் வரிசையாக அடுக்கி வைத்தனர். 

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தேன்கனிகோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.