தண்ணீரில் மிதக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்...ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

தண்ணீரில் மிதக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்...ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் அதிக மழை பெய்து வருகிறது. இதனால்  தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. 

இதையும் படிக்க : கனமழை : கடலோர மாவட்டங்களை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவு!

இந்நிலையில் வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கிய மழை நீரால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் மக்கள்  கடும் அவதிக்கு ஆளாகினர்..