திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு நாளை பயிற்சி பாசறை!

திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு நாளை பயிற்சி பாசறை!

இராமநாதபுரத்தில் திமுக வாக்குசாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக ஒவ்வாெரு கட்சிகளும் தங்கள் கட்சியை பலப்படுத்தி தேர்தலை வெல்வதற்கு ஆயத்தமாக வருகின்றன. 

திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இதற்காக மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக மத்திய மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. திருச்சியில் நடந்த இந்த பயிற்சி முகாமில் 12,645 பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

இதனையடுத்து தெற்கு மண்டலத்திற்கான பயிற்சிக் கூட்டம் நாளை 17-08-2023 நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 கழக மாவட்டங்களில் இருந்து 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர். 

இதையும் படிக்க: சுங்கச்சாவடி ஊழியர்களின் அராஜகங்கள்...லாரி ஓட்டுனரை வெறிகொண்டு தாக்கிய ஊழியர்!!