கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ்.! - கிடைத்தது மரண வாக்குமூலம்.

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ்.! - கிடைத்தது மரண வாக்குமூலம்.

பட்டுக்கோட்டையில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரின் 'மரண வாக்குமூலம்' தற்பொழுது வெளியாகி உள்ளது.

பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரும் ரோஜா கோல்டு ஹவுஸ் நகை கடை உரிமையாளருமான ரோஜா ராஜசேகர் திருட்டு நகை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமா சங்கரி என்பவர்  அவரது மனைவியையும், அவரையும் கைது செய்து அவரது மனைவிக்கு முன்பாக  தரக்குறைவாக நடத்தியதாக கூறி உறவினரிடமும் நண்பர்களும் புலம்பி கொண்டிருந்தார்.  அவர் அன்று இரவு பட்டுக்கோட்டை அருகே உள்ள செட்டிய காடு என்ற பகுதியில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற ரயிலின் முன்பாக  பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக அவரது உடலை வாங்க மறுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பட்டுக்கோட்டை நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மற்றும் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 
அதனைத் தொடர்ந்து திருச்சி குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் உமா சங்கரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டதாக  கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிட்டு  உடலைப் பெற்றுக் கொண்டனர். எனினும், இடமாற்றம்  மட்டும் போதாது என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்து போன ரோஜா ராஜசேகர் எழுதிய மரண வாக்குமூலம் கிடைத்துள்ளதால்.  திருச்சி கே கே நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமாசங்கரியின் மீதான புகாருக்காண முகாந்திரம் தீவிரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது . 

ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தன்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன உளைச்சல் ஏற்படுத்திய ஒரு உதவி காவல் ஆய்வாளர் இடமாற்றம் மட்டும் செய்தது போதாது என்றும் ரோஜா ராஜசேகரின் தற்கொலைக்கு காரணம் என்பதன் அடிப்படையில் அவர் மீது  வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்  கோரிக்கை  தீவிரமடைந்துள்ளது.  

ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ரோஜா ராஜசேகரின் உறவினரான வாசன் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு ரோஜா ராஜசேகர்  இறப்பதற்கு முன்பு அவரது கடையில் இருந்த பில் புத்தகத்தில்  எழுதி வைத்திருந்த கடிதங்களை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விபரம்:

1. சாவுக்கு காரணம் திருச்சி போலீஸ்.
2. மனைவியை கைது செய்தது.
3. எனக்கு உயிர் ரோஜா, தனலட்சுமி,விஜயன், வாசன் மற்றும் நிறைய .
4. வாசன், விஜயன் தைரியமாக கடையை நடத்த வேண்டும்.
5. உடனே தாமதிக்காமல் மின் சுடுகாட்டில் முடிக்கவும், சாவு திருவிழா நடத்தக்கூடாது.
6. எவ்வித தொடர் சடங்கும் நடத்தக் கூடாது, இறுதி சடங்குகள் எதுவும் வேண்டாம்.

என எழுதிய ஆறு துண்டு சீட்டுகளை ரோஜா ராஜசேகரின் உறவினரான வாசன் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.