7 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ்...8 வது முறை ஆஜரானது ஏன்?-ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
ஆறுமுகசாமி ஆணையத்தில் 7முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பன்னீர்செல்வம் 8 வது முறை ஆஜராகி அந்தர் பல்டி அடித்தது ஏன்? என ஆர்,பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை சாடிய ஆர்.பி.:
உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் ஒ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆர்,பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சரை பதவி பெற பன்னீர்செல்வம் செய்த சித்துவிளையாட்டுகள் அவர் மனசாட்சிக்கு விட்டு விடுவதாக கூறினார்,
இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Arumugasamy-Commission-report-submission
குற்றச்சாட்டு:
மேலும், தன்னுடைய சட்டமன்ற பதவியை தியாகம் செய்த தங்க. தமிழ் செல்வனை கட்சியிலிருந்து ஓரம் கட்டி, இன்றைக்கு அவர் திமுகவில் சேரும் சூழ்நிலையை உருவாக்கியது ஓ.பன்னீர்செல்வம் தான் என குறிப்பிட்டார்.
கேள்வி எழுப்பிய ஆர்.பி:
தொடர்ந்து, துணை முதலமைச்சராக இருந்த போது, ஏழு முறை நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியும் ஒருமுறை கூட ஆஜராகி சாட்சி சொல்லாதவர், பதவி போன பின்பு ஆஜராகி தலைகீழாக மாற்று கருத்துக்களை கூறியது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை உங்கள் குடும்ப சொத்தாக்க முயற்சி செய்வது ஒருபோதும் எடுபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.