பிளஸ் 2 பொதுத் தேர்வு ரிசல்ட் திங்கள்கிழமை வெளியீடு... 

நாளை மறுதினம்  பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு ரிசல்ட் திங்கள்கிழமை வெளியீடு... 

கொரோனா பரவல் காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறவில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு இல்லாமல் மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, மாவட்ட வாரியாக மாணவர்களுக்கான மதிப்பெண் நிர்ணய பணிகள் முடிந்துள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், முந்தைய தேர்வு அடிப்படையிலான மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, அரசு தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, மதிப்பெண் வழங்குவதற்கான முறைகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை, அரசாணை வெளியிட்டது.  இந்த அரசாணை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.


இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதிப்பெண் பட்டியலை வரும் 22ம் தேதி முதல், இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.