அரசு பள்ளி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது..!

பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது..!

அரசு பள்ளி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது..!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், பாவூர்சத்திரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மரியதாய்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த மைக்கேல் சவரிமுத்து (38) மற்றும் பெத்த நாடார்பட்டி கஸ்பா தெருவை சேர்ந்த காண்டீபன் (55) ஆகிய இருவரையும் பாவூர்சத்திரம்  போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 25,000 மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட  இரண்டு மூட்டை குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.