ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது...21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.!

சேலம் வழியாக திருவனந்தபுரம் நோக்கி சென்ற ரயிலில் 21 கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது...21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.!

தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதாக அடுத்தடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் ஹைதராபாத்திலிருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற சபரி அதிவிரைவு ரயிலில் சேலம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இருளப்பன் மற்றும் பாண்டி  ஆகியோர் 21 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.