இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து...!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

பெங்களூருவில் இருந்து சென்னை - நோக்கி சென்ற அரசு பேருந்தும், இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திக்குள்ளானது.

இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

இந்த கோர விபத்தில் மூன்று ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.