கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி...

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி...

 பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால், டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியிருப்பது  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் மாநகராட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.