"House Wife ஆக இருந்தவர்களை, House Owner ஆக மாற்றியுள்ளது திராவிட மாடல்" அமைச்சர் உதயநிதி!!

மகளிருக்கான பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட நால்வர் நெடுஞ்செழியன் நகர் திட்டப்பகுதியில் 450 புதிய குடியிருப்புகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டிய பின் மேடையில் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிகளுக்கு சென்றாலும், சென்னை சேப்பாக்கம் தொகுதியின் செல்லப்பிள்ளை நான் எனவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொகுதி இது அதனால் இது என்னுடைய சொந்த வீடு போன்றது என்றார். இந்தத் தொகுதியில் இன்று 443 சதுர அடியில் 450 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது எனவும் இந்த பணிகள் 15 மாதத்திற்குள் நிறைவு பெற்று புதிய வீடுகள் உங்களுக்கு வழங்கப்படும் என்றார்.  

தொடர்ந்து பேசியவர், திமுக அரசு தொடர்ந்து மகளிர் காண பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது எனவும் அந்த வகையில் புதிதாக கட்டிக் கொடுக்கப்படும் இந்த வீடுகள் மூலமாக House wife என்று இருந்த மகளிரை House Owner யாக மாற்றி இருக்கிறோம் எனவும் கூறினார். 

மேலும் சொந்த வீட்டை எப்படி பராமரிப்பீர்களோ அதுபோல நாங்கள் கட்டிக் கொடுக்கும் இந்த வீடுகளையும் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளது போல குடியிருப்போர் நல சங்கம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.