பாதாள சாக்கடை... விரிவான திட்ட அறிக்கை!!!

பாதாள சாக்கடை... விரிவான திட்ட அறிக்கை!!!

தமிழ்நாட்டில் 100% பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூவிருந்தவல்லி, திருவேற்காடு, பழனி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆற்காடு, பேர்ணாம்பட்டு,  ராணிப்பேட்டை, ஆரணி, குமாரபாளையம், தேவகோட்டை, கோபிசெட்டிபாளையம் மற்றும் வால்பாறை ஆகிய நகராட்சிகளில் சாத்தியக்கூறு மற்றும் நிதி திறன் அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  அனைத்து வீடுகளிலும்  “க்யூ ஆர் கோடு”..!!