"நவீன ஊழலின் அடையாளம் பரனுர் சுங்கச்சாவடி" சு.வெங்கடேசன்!!

"நவீன ஊழலின் அடையாளம் பரனுர் சுங்கச்சாவடி" சு.வெங்கடேசன்!!

நவீன ஊழலின் அடையாளமாக பரனூர் சுங்கச்சாவடி விளங்குவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் சுங்கச்சாவடியை கடந்து ஆண்டில் மட்டுமே ஒரு கோடி 12 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஆனால், அவற்றில், 62 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற விஐபி வாகனங்கள் என கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்.பி. சு.வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். " செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது எனவும் இதில் 62 லட்சம் வாகனங்கள்  சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள் என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது. மேலும், பரனூர் சுங்கச்சாவடியை இனி பாஜக மாடல் சுங்கச்சாவடி என்றே அழைக்கலாம்" எனச் சாடியுள்ளார்.