ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வேல்முருகன் எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வேல்முருகன் எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரு தேர்தல் என்னும் விஷ விதை ஒன்றிய பாஜக அரசால் நாட்டில் விதைக்கப்படுகிறது தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை பொறியியல் துறை மூலம்  விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில்  பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் வீடர் கருவிகளை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. முதற்கட்டமாக பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45 பவர் டில்லர் இயந்திரங்களை சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை மதவாத நாடாக மாற்ற எல்லா முயற்சியையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்கிறது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை  கேலிக்கூத்தாக்கும் செயல், பன்முகதன்மையை பாழாக்கும் செயல், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் செயல் என குற்றம் சாட்டினார்.

மேலும் ஒரே நாடு ஒரு தேர்தல் என்னும் விஷ விதையை ஒன்றிய பாஜக அரசு நாட்டில் விதைக்கின்றது என கடுமையாக சாடினார். தொடர்ந்து, சனாதனத்தை கொசுவைப்போல், மலேரியாவைப்போல் ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதி கருத்துக்கு வேல்முருகன் உதயநிதிக்கு ஆதரவு அளித்து பேசினார். 

மேலும் படிக்க: உதயநிதிக்கு ஆதரவாக ஹேஷ்டேக்!