சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குனராக வித்யா ஜெயந்த் குல்கர்னி  நியமனம்...

சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குனராக வித்யா ஜெயந்த் குல்கர்னி  நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குனராக வித்யா ஜெயந்த் குல்கர்னி  நியமனம்...

தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி உட்பட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை சிபிஐ இணை இயக்குநர்களாக நியமித்து ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.  

அதன் அடிப்படையில் தற்போது சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ள வித்யா ஜெயந்த் குல்கர்னி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், தமிழக காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.