நியூஸ் க்ளிக் அலுவலகத்தில் நடத்திய சோதனைக்கு வைகோ கண்டனம்...!

நியூஸ் க்ளிக் அலுவலகத்தில் காவல்துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய சோதனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் நியூஸ் க்ளிக் அலுவலகத்தில் காவல்துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய சோதனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்கள் தொடர்ந்து பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாகி வருவதாக  கூறியுள்ளார்.

இதையும் படிக்க : கனமழை எதிரொலி: அறுவடைக்கு தயாராக இருந்த விளை நிலங்கள் சேதம்!

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படும் பத்திரிகை ஊடகங்களின்  செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். இதனை முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமை என்றும் வைகோ கூறியுள்ளார்.