அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் விஜய்...

வெளிநாட்டு சொகுசு கார் விவகாரத்தில், விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு  செய்தார் விஜய்...

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார். 

அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தம்மை  பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, வரும் ஜுலை 19 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.