மாணவர்களிடையே கோஷ்டி மோதல்... ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வைரல் வீடியோ...

பென்னாகரம் மாணவர்களிடையே கோஷ்டி சண்டை மாணவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கும் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

மாணவர்களிடையே கோஷ்டி மோதல்... ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வைரல் வீடியோ...

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே கோஷ்டி சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவரை தாக்கும் செயல் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை மாணவர்களிடையே சண்டை  ஏற்பட்டதாகவும்  அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இன்று மீண்டும் சண்டை நடைபெற்றுள்ளது. இதனை மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோவை மாணவர்களே வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.  சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடைபெற்ற இத்தகைய  வன்மச்செயலை, அப்பள்ளியின் ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளது மிகுந்த வேதனை தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு  தருமபுரி அடுத்த நல்லம்பள்ளி அருகே ஒரு அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு மாணவன் முத்தமிடும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்  தற்போது பள்ளி வளாகத்திற்குள்ளே மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிகொள்ளும் வீடியோ வைரலாகி வருவதால் பெற்றோர் மத்தியல் அதிர்சியை ஏற்பட்டுள்ளது.