மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டெல்லி சென்றார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்...

மேகதாது அணைப் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசுக்கு நேரில் அழுத்தம் கொடுக்கும் வகையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திப்பதற்காகதமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டெல்லி சென்றார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்...

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் தமிழகத்திடம் தெரிவிக்காமல் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கட்டியுள்ளது. மேலும் மேகதாதுவில் அணைகட்டுவதை தமிழக அரசு எதிர்க்க கூடாது என அண்மையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவாகரங்கள் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் விவாதிப்பதற்காக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் டெல்லியில் முகாமிடும் அவர், மேகதாது மற்றும் தென்பெண்ணை விவகாரம் குறித்தும் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்தும் தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்க உள்ளார்.