பா.ஜ.க வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க நாங்கள் விரும்பவில்லை....அமைச்சர் மா. சுப்பிரமணியன்

பா.ஜ.க வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க நாங்கள் விரும்பவில்லை.விரைவில் அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க நாங்கள் விரும்பவில்லை....அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 24,882 இடங்களில் நடத்தப்பட்டது என்றும் அதில் இன்று 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார்

மேலும் எந்த விழாவாக இருந்தாலும் கொரொனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறை வழங்கி வருகிறோம் என கூறினார்.

நீட் தேர்வை தலைகீழாக நின்றாலும் ரத்து செய்ய முடியாது என பா.ஜ. க தலைவர் அண்ணாமலை கூறியது குறித்தான கேள்விக்கு பா.ஜ.க வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க நாங்கள் விரும்பவில்லை.விரைவில் அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம் என தெரிவித்தார்.