5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 5 மாதங்களில் செய்துள்ளோம்...முதலமைச்சர்..!!

5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 5 மாதங்களில் செய்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளாதாக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 5 மாதங்களில் செய்துள்ளோம்...முதலமைச்சர்..!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்தவ  நல்லிணக்க இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக் வெட்டியும் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் குடிலையும் திறந்து வைத்தார்.


அதன் பின்னர் விழா மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கூறுகையில்,

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு உள்ளதாகவும் சிறுபான்மையினர் ஏற்றம் பெற கூடிய காலமாக திமுக ஆட்சி காலம் தொடங்கியுள்ளதாக கூறினார்.

நாம் மொழியால் இனத்தால் தமிழர்கள், ஆனால், வழிபாடு என்பது அவரவர் விருப்பம் எனவும் ஒரு வயிறு தாங்காத காரணத்தால் தனித்தனியாக பிறந்த தமிழ் சகோதரர்கள் தான் நாம் என மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.

கிறிஸ்துவம் உள்ளிட்ட எல்லா மதமும் அன்பை போதிப்பதாக கூறிய அவர், அன்பு என்பது சாதி, மத, மொழி, இனம், பால் வேறுபாடு பார்க்காது எனவும் இதில் பேதம் பார்க்கும் யாரும் ஒதுக்கப்பட கூடியவர்கள் என கூறினார்.

ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் பார்த்து பார்த்து தாயை போல திட்டம் போட்டு நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனவும் அவர் பெருமையுடன் கூறினார். மேலும் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 5 மாதங்களில் செய்துள்ளதாகவும் கூறினார்.

500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் வழங்கினோம், என கூறிய அவர்,  பெருமையுடன் சொல்கிறேன் அதில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளாதாக தெரிவித்தார் 

அன்பு ஒன்று தான் இந்த வாழ்கையின் சட்டம் அந்த சட்டப்படி தான் இந்த அரசு செயல்படும் என உறுதியளித்த அவர், அதை உணர்வை ஊட்டும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி உள்ளதை பெருமையுடன் கூறுகிறேன் என தெரிவித்தார்.

.