சாதி, மதம், இல்லா சமூதாயத்தை உருவாக்க வேண்டும் - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

சாதி, மதம், இல்லா சமூதாயத்தை உருவாக்க வேண்டும் - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வள்ளலாரின் கொள்கைகளை அரகேற்றும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையக்கோட்டையில் வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். பின்னா் பேசிய அவா், இந்து மக்களுக்கு கொடுமைகள் ஏற்பட்ட போது திராவிட இயக்கம் பாதுகாப்பாக இருந்ததாக தெரிவித்தார்.

மேலும், சாதி, மதம், இனம் இல்லா சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திட்டவர் வள்ளலார் என்றும், அதனை நடைமுறைப்படுத்தி வருவது திராவிட இயக்கம் எனவும் அவா் தொிவித்தார்.