” பெரியார் விருது கொடுக்கலாம் என்றிருந்தோம்” - கீ. வீரமணி வேதனை

” பெரியார் விருது கொடுக்கலாம் என்றிருந்தோம்” - கீ. வீரமணி வேதனை

"தன்னம்பிக்கை நிறைந்த தனித்துவமான உழைப்பால் உயர்ந்த நடிகர்.குடும்பத்திற்கு மட்டும் பேரிழப்பு அல்ல .திரை உலகத்துக்கு மட்டும் பேரிழப்பு அல்ல ; பகுத்தறிவு உலகுக்கு ஏற்பட்ட இழப்பு என திராவிட கட்சி தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.  

மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி எழுதியுள்ள இரங்கல்  குறிப்பில் குறிப்பிட்டதாவது,... 

"பிரபல இயக்குநரும், சிறந்த  நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் தேனி மாரிமுத்து (வயது 56) அவர்கள் மறைந்தார் (8.9.2023) என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது!

அண்மையில் பிரபலமான 'சன்' டி.வி. 'எதிர்நீச்சல்' தொடரில் அவரது நடிப்புசிறப்பானது. தனது பேட்டிகளில் அவர் ‘கடவுள்’ நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கையை மிகவும் அம்பலப்படுத்தி வெளிப்படையாகப் பேசியவர். 

அதன் மூலம் பெரியார் கொள்கையாளர் என்பதை அறிந்தோம். அவருக்குப் பெரியார் விருது' அளிப்பதாக நாங்கள் முடிவு செய்து இருந்தோம்.

அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, கலை உலகத்திற்கும், பகுத்தறிவு உலகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும்!  பெரியார் கொள்கை உறவு ஒருவர் மறைந்தார் என்பது அதிர்ச்சி செய்தி!

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர் கவிப் பேரரசு வைரமுத்து மற்றும் கலை உலகப் பகுத்தறிவாளர்களுக்கும் எமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு நமது வீர வணக்கம்".

இவ்வாறு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

இதையும்  படிக்க   | மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!