யார் குறைந்த விலைக்கு விற்பது..? தோசை கடைகளுக்கு இடையே போட்டா போட்டி...!
பத்து ரூபாயில் பசி பறந்து விடும்...!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ. 4 க்கு ஊத்தப்பம் ரூ.5 க்கு பெரிய அளவிளான தோசை, சாம்பார், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என இரண்டு வகையான சட்னிகளுடன் விற்கபடுகிறது.
தற்போதைய கடும் விலைவாசி உயர்விலும் ரூ. 3 க்கு இட்லி, ரூ 4 க்கு ஊத்தாப்பம் ரூ 5க்கு விற்கப்படும் தோசையை அதிகாரிகள் முதல் அரசியல் வாதிகள் வரை அனைவரும் ருசித்து சாப்பிட்டு, தங்களது பசியை போக்கி வருகின்றனர். இந்த நிலையில் இதிலும் யார் குறைந்த விலைக்கு விற்பது என இட்லி கடையினருக்கு இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூ. 20 போதும் காலை உணவை நிறைவு செய்யலாம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் இதைவிட ஒருபடி மேலாக கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் ரூ. 2 க்கு இட்லி ரூ.3 க்கு தோசை சாம்பார், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என இரண்டு வகையான சட்னிகளுடன் கிடைக்கிறது. மதுரை, சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு இட்லி ரூ 12க்கும் மேலாகவும், ஒரு தோசை ரூ 40க்கும் மேலாகவும் உணவகங்களில் விற்கும் நிலையில், கடலாடி அருகே புனவாசல், கோவிலாங்குளம் கிராமத்தில் மிக குறைந்த விலையில் இட்லி தோசை விற்பனை செய்யபடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் விலைவாசி கடுமையாக ஏற்றம் அடைந்துள்ள நிலையிலும் கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளிகள் பாதிக்க கூடும் என்ற நோக்கில் லாபமின்றி சேவை செய்யும் அடிப்படையில் தொடர்ந்து மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்கி மக்களின் பசியை போக்கி வருகிற நிலையிலும் கூட, யார் குறைந்த விலைக்கு உணவு விற்பது என தோசை கடையினருக்கு இடையே போட்டி நிலவுகிறது என கருதுகின்றனர்.