அதிமுக ஒற்றைத்தலைமை பதவிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ யாருக்கு ஆதரவு?

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்றும், ஒற்றைத்தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பது என நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள்தாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

அதிமுக ஒற்றைத்தலைமை பதவிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ யாருக்கு ஆதரவு?

ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்து இப்போது யார் ஒற்றைத் தலைமை ஏற்பது என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னணி தலைவர்கள் இரண்டு தரப்புக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கட்பூர் ராஜூ, கட்சி நிர்வாகிகளுடன் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திடீரென ஆலோசனை நடத்தினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் 29 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் என 30 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, அனைத்து உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும்,  அவர்கள் முடிவு தான் தன்னுடைய முடிவு என்றும் கூறினார்.