ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை தொந்தரவு செய்தது ஏன்?... உயர்நீதிமன்றம் கேள்வி...

விசாரணை என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை தொந்தரவு செய்தது ஏன்? என, போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை தொந்தரவு செய்தது ஏன்?... உயர்நீதிமன்றம் கேள்வி...

ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு விசாரணைக்காக தம்மையும், தமது மகன்கள் உள்ளிட்டவர்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிடக்கோரி, ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,  குற்றச்சாட்டுக்கு ஆளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள்.

விசாரணை செய்யுங்கள்... ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது. பின்னர், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.