ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யாவை கைது செய்யாதது ஏன் ?

பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யாவை கைது செய்யாதது ஏன் என பாதிக்கப்பட்டவரின் தரப்பு  வழக்கறிஞர் வினவியுள்ளார்.

ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யாவை கைது செய்யாதது ஏன் ?

சென்னையில் நடிகர் ஆர்யாவைப் போல் சமூக வலைதளங்களில் பேசி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை சமீபத்தில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் ஆர்யாவிற்குத் தொடர்பில்லை எனக் கூறி சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தி உள்ளார்.

பணம் பறித்த வழக்கில் முதல் குற்றவாளியாக  சேர்க்கப்பட்ட ஆர்யா மீது கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபடாதது ஏன் என பெண்ணின் வழக்கறிஞர் ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.