” நூலகம் மீது இவ்வளவு அலர்ஜி ஏன்?” - சு.வெங்கடேசன் கேள்வி.
நூலகம் எனும் அறிவுக்கோயில் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஏன் இவ்வளவு அலர்ஜி என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.பி வெங்கடேசன், புத்தகம் கேட்கிற பிள்ளைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கும் நிலையில், நூலகம் அறிவுக்கோயில், அதன் மீது ஆர்.பி உதயகுமாருக்கு இவ்வளவு அலர்ஜி ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை”என்று திரு. உதயகுமார் சொல்கிறார்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 28, 2023
புத்தகம் கேட்கிற பிள்ளைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கிறார்கள்.
அதிமுகவினர் வீட்டில் மட்டும் இல்லையா உதயகுமார் அவர்களே!
நூலகம் அறிவுக்கோயில்! அதன் மீது இவ்வளவு அலர்ஜி ஏன்? pic.twitter.com/fBnoNBH5o5
இதையும் படிக்க | "காங்கிரஸ் குறித்து பேசுவதற்கு அமித்ஷாவிற்கு தகுதியில்லை" மாணிக்கம் தாகூர் எம்.பி. காட்டம் !