அதிமுகவின் படுதோல்விக்கு ஈ.பி.எஸ் தான் காரணம்...ஓபிஎஸ் காட்டம்!

அதிமுகவின் படுதோல்விக்கு ஈ.பி.எஸ் தான் காரணம்...ஓபிஎஸ் காட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று குற்றம் சாட்டியுள்ள ஓபிஎஸ், இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு : முறை கேடுகளுக்கு கிடைத்த வெற்றி - ஜி. கே.வாசன் பேட்டி!

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளாததே காரணம் என்று தெரிவித்துள்ளார். தான் என்ற அகம்பாவத்தில் கட்சிக்காக தியாகம் செய்தவர்களையும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப் பட்டவர்களையும் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேற்றியதாக ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

மேலும், இடைத் தேர்தலை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.