என்னை பார்த்து ஏன் முறைக்கிறான் என கூறி இளைஞரை தாக்கிய உதவி ஆய்வாளர்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

என்னை பார்த்து ஏன் முறைக்கிறான் என கூறி இளைஞரை தாக்கிய உதவி ஆய்வாளர்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற இளைஞர் கடந்த ஜூன் 27 ஆம் தேதி (திங்கள் கிழமை) இரவில், வேம்பார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூரங்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரம் ஜீவானந்த-மை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, அங்கு வந்த அவரது அண்ணன் என் தம்பியை ஏன் அடிச்சீங்க?, பஸ் ஏற நிற்ககூடாத... நின்னா... அடிப்பீங்களா?" என்று கேட்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோ பதிவில் சார்பு ஆய்வாளர் சுந்தரம்," பஸ் ஸ்டாண்ட்ல ஏன் இருக்கன்னு கேட்டா... என்னை பார்த்து ஏன் முறைக்கிறான்..." என்று கேட்பதும் பதிவாகியுள்ளது.