மாநில அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? - தொழிற்சங்கங்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசை எதிர்த்து போராடும் தொழிற்சங்கங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாநில அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? - தொழிற்சங்கங்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில், நீதிமன்ற ஜாமின் நிபந்தனைப்படி, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், துபாய்க்கு செல்ல எவ்வளவோ விமானங்கள் இருந்தாலும், விமானம் இல்லை என்பதைக் காரணம் காட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த பயணம் அரசுமுறைப் பயணமா? அல்லது அரசர் முறை பயணமா? முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? எனவும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.