புதிய கட்டிடம் கட்ட அரசு முன்வருமா...!!

புதிய கட்டிடம் கட்ட அரசு முன்வருமா...!!

தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லாத பழுந்தடைந்துள்ள,  வட்டாட்சியர் அலுவலகங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், லால்குடி தொகுதி லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், ஒட்டபிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு முன்வருமா என  சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன் மற்றும் சண்முகையா கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து பொதுப்பணித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, வருவாய் நிர்வாக ஆணையரின் கருத்துக்கள் அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க:  மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம்....15 நாட்களுக்குள் செலுத்தும் மக்களுக்கு சலுகைகள்....!!