திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? வானதி சீனிவாசன் கேள்வி

திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?  வானதி சீனிவாசன் கேள்வி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு துறை,  திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்குமா என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 மேலும், உத்தரபிரதேசம் , பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும்,  அனைத்திலும் பாரதிய ஜனதா  வெற்றியை உறுதி படுத்தும் என்றும் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.