இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா.?  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதில்.!

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா.?  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதில்.!

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தற்போது இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 3. 5 சதவீத இடஒதுக்கீட்டின் படி இஸ்லாமிய மக்கள் பொருளாதார ரீதியாகவும், அரசின் சலுகைகளையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டினை 1.5 சதவீதம் அதிகரித்து வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.