அதிமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவமில்லை.. திமுகவில் இணைந்த விஜிலா சத்யானந்த் பேட்டி...

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் எம்.பி.,யுமான விஜிலா சத்யானந்த் திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவமில்லை.. திமுகவில் இணைந்த விஜிலா சத்யானந்த் பேட்டி...
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திமுகவில்  தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
 
மக்கள் நீதிமய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா ஆகியோர் நேற்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 
 
அதனைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகராட்சியின் மேயராக இருந்து, பிறகு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்து, தற்போது அதிமுக மாநில மகளிரணிச் செயலாளராக இருக்கும் விஜிலா சத்யானந்த் நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விஜிலா சத்யானந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.
 
"பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இணைந்திருக்கிறேன். முதற்கட்ட அளவிலேயே முதலமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், 10 மாவட்ட ஆட்சித்தலைவர்களில் பெண்கள் நியமனம் என பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எனக்குப் பிடித்து இருந்தது.
 
ஜெயலலிதாவிற்குப் பின் அதிமுகஉண்மையான திராவிடன் செல்லவேண்டியது கமலாலயம் அல்ல, அறிவாலயம். திமுக தொண்டனாக நான் பணியாற்ற விரும்புகிறேன். அதிமுகவில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபொழுது முதல் வரிசையில் அமர வைக்கப்பட்ட மகளிரணியினர், இப்போது ஒதுக்கப்பட்ட ஒரு நிலையில்தான் உள்ளனர்.
 
அதிமுகவில் மகளிருக்குப் பலனில்லைஅதிமுகவில் சட்டப்பேரவை உறுப்பினர்களை திருப்திப்படுத்த மட்டுமே கட்சித் தலைமை கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது. தற்போது, அக்கட்சியில் மாவட்ட செயலாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சிக்காக உழைக்கும் மகளிருக்கு அதிமுகவில் எந்தவிதப் பலனும் இல்லை" என்றார்.